Thursday, June 21, 2012

பிரார்த்திப்போம் எந்நாளும்!


காலங்கள் கடந்தாலும்
கலை ஞானம் நிலைக்கச் செய்த
ஆசானே உம் நினைவுகள்
என்றென்றுமே வாழ்ந்திருக்கும்!
கற்போர்க்கு வழிகாட்டி
கல்விக்கு உயிரூட்டி
உத்தமராய் உதித்தீரே
நம்மண்ணில் விடிவிளக்காய்!

நல்லாசானாய்
அதிபராய்
உயர் அதிகாரியாய்
பல பரிமாணங்கள் பெற்று
வெலிகமை மண்ணுக்கு
பெருமை சேர்த்தீரே!
மாணவச் செல்வங்கள்
மதிப்புடனே வாழ்ந்திட
பண்பாகப் படிப்பித்து
பார்போற்றச் செய்தீரே!

அன்றைய மாணவருள்
அறபாவில் நீர் மட்டும்
பேராதனை பல்கலைக் கழகத்தின்
பட்டதாரியானீரே!
இவ்வுலகக் கல்வியுடன்
சன்மார்க்கம் இலக்கியம் என
சாதனைகள் புரிந்தீரே
சரித்திரமாய் திகழ்ந்தீரே!

ஈருலக வெற்றிக்கும்
அயராது உழைத்த உம்மை
ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
சுவன வாயில் வரவேற்க..
பிரார்த்திப்போம் எந்நாளும்
பிரார்த்திப்போம் என்றென்றும்!!!

(மர்கூம் ஏ.ஆர்.எம். ஹுஸைன் அவர்களின் நினைவாக எழுதப்பட்ட கவிதை)

No comments: