Thursday, June 28, 2012

வசந்த வாசல்!


எல்லாம் விதி
என்று பழகிப்போன
என் வாழ்க்கை
ஏமாற்றங்களால்
நிறைந்திருந்தது!

துன்பங்களின் இறுதி அத்தியாயம்
முடியும் வரை காத்திருக்கிறேன்..
இனி மகிழ்ச்சி தொடங்கும்
என்ற நம்பிக்கையில்!

துயரங்களால்
துரத்தப்பட்ட என் வாழ்வு
இனி பூக்களால்
அலங்கரிக்கப்படும்!

எல்லோரும்
இராமர்கள்தானே..
தத்தமது இராவணக் குணங்கள்
அம்பலமாகும் வரை

ஆதலால்

குற்றம் சொல்லியே
பழகிப்போன
சுற்றத்தாரும் இனிமேல்
என்னைத் தேடி வருவார்கள்!

என்
கண்ணீரைத் துடைத்தெறிந்து
பன்னீரை ஏந்தியிருக்கிறேன்..

வசந்த வாசலில்
எனக்கான தென்றல்
வீசிக்கொண்டிருக்கிறது!!!

No comments: