Saturday, May 22, 2010

நிலவுறங்கும் நள்ளிரவு !

நிலவு தூங்கும் நள்ளிரவில்
என் நிம்மதியைக் கொன்ற
உன் நீங்காத நினைவுகளை
நித்தமும் நான்
குற்றம் சொல்வேன்!

ஆழ்மனசில் தத்தளித்து
ஆறாத ரணமாக
அரித்துக் கொண்டிருக்கும்
உன் நினைவுகளை
அர்த்தமற்று நான்
சுமந்து கொண்டிருப்பதற்கும்
அத்தான் உனையே
குற்றம் சொல்வேன்!

இலவு காத்த கிளி போல
இம்சைப் படும் என் மனதுடன்
இரக்கமே இல்லாமல் நீ
நடப்பதற்கும்
உன்னைத் தானடா
குற்;றம் சொல்வேன்!

உன் எண்ணங்களை
மட்டும் ஏந்தி
என் உள்ளம்
வெந்து தகிப்பதற்கும்
உன்னையே குற்றம் சொல்வேன்!

கன்னியென் மனதை
கருணை கொண்டு
நோக்கத் தெரியாத
கயவனான உன்னை நான்
நித்தமும்
சத்தமாய்
குற்றம் சொல்வேன்!!!

No comments: