Sunday, May 23, 2010

அழகான அடையாளம் !

மானிடராய் பிறந்தவர்க்கு
மரணம் ஒரு நாள் நிச்சயம்!
மனம் போன போக்கில் வாழ்ந்து
மனிதா நீ
எதை சாதிக்க லட்சியம்?

கடந்த பாதையை எண்ணி
கவலைப்படுவதை விட்டு
கடக்கப் போகும் பாதையை
இஸ்லாமிய கயிறால் சுற்று!

மரணம்
ஒரு போதும்
உன்னை அநுசரித்து
வராது!

அஃது
எப்போது வரும் என்று
எவருக்கும் தெரியாது!

அந்த நாள் உன்னை
அண்மித்து விட்டதாய் எண்ணி
அச்சப்பட்டுக் கொள்!

அல்லாஹ்வுக்காய்
அனைத்தையும்
அலங்கரித்துக் கொள்!!!

No comments: