Sunday, May 23, 2010

வாழ்வு மிளிரட்டும் !

புயலில் சிக்கிய
இலைகளைப் போல் - நீ
தடுமாற்றம் கொள்கிறாயா?

துக்கத்தின் கண்ணீர்த்துளி
இத்தரை மீது விழக் கூடாது!

உன் நெற்றியில்
வேதனைக் கோடுகளை
வரைந்தால்..
கடந்து செல்லும்
தென்றலும் உனை
தட்டியெழுப்ப மறந்து விடும்!

உறக்கத்தை விட்டு
உற்சாகம் கொள்!
கண்களைத் திறந்து
காரியப்படு!
கவலைகளை உன்
முகத்திலிருந்து
துடைத்தெறி!

சிறகுகள் வலித்து
சோர்வுறும் வரை
விண்மீன்களை நோக்கி
பறந்திட முயலு!

அமைதியான நீர் நிலையில்
துளிர்விடும் தாமரை போல்
உன் அம்சங்கள் ஒளிரட்டும்
உன் வாழ்வு மிளிரட்டும்!!!

No comments: