Saturday, May 22, 2010

வாசி என்னை நேசி !

ஆசை நாயகியே!
என் அடி மனதில்
ஆழமாய் பதிந்து விட்ட
காதல் ஓவியம் நீ!

ஆண்டுகள் பல கடந்தாலும்
அழித்து விட முடியாத
அமர காவியமும் நீயே!

சோலை மலரெழிலாய் - என்
சிந்தையிலே ஆடும்
தோகை மயிலாய்
என்னில் கலந்து நீ
என்றும் உறவாடுகின்றாய்!

ஏனின்னும் புரியாதிருக்கிறாய்
என் நிலையை?
என்னைத் தவிக்க விட
என்னடி என் மேல் கோபம்?
எனை ஒதுக்குவதால்
உனக்கென்னடி லாபம்?

பாடப் புத்தகங்களில் கூட
உன்னைத் தான்
வாசிக்கிறேன்!
பரிவாய் உன்னையே
நேசிக்கிறேன்!
நீ பாராமுகமாய்
எதை யோசிக்கிறாய்???

No comments: