Saturday, May 22, 2010

நித்திரையில் சித்திரவதை !

கண்ணின் பார்வையாய்
என் கண்ணில் கலந்துவிட்ட
கண்ணாளா..
நீ என்னை கரம் பிடிக்கும்
நாள் எந்நாளோ?

காலம் கனியும் வரை
கைமுதலும் சேரும் வரை
காத்திருக்க கூறினாய் அன்று..

காலம் கனிந்தும்
கைமுதல் சேர்ந்தும்
காத்திருக்க வைக்கிறாயே
இன்று?

நித்திரையில் வந்து
நித்தம் நித்தம்
சித்திரவதை செய்கிறாய்

No comments: