Saturday, May 22, 2010

ஒலிக்கும் மதுரகானம் !

மன ஊஞ்சலில்
மகிழ்ந்தாடும் மயிலே!
மன்மதன் மாளிகையில்
மதுரகானம் பாடும்
மாந்தோப்புக் குயிலே!

என் நெஞ்சமதில்
எத்தனையோ
எண்ண அலைகள் - அவை
அத்தனையும் நீ பின்னும்
காதல் வலைகள்!

வான் நிலவும்
தேன் சிந்தும் மலரும்
பூம்பொழில் எல்லாமே
உன் எழில் வண்ணமோ?

என்னவனே!
உன் நினைவால்
உருகி வடிகிறேன் நான்!
உன் ஞாபகங்களே
தினமும் என்னில் ஊறும் தேன்!

அன்பே!
நீயின்றி நானில்லை
அறிவாயோ??

No comments: