Sunday, May 23, 2010

ரணமாகிப் போன

காலம்..
அது விதியின் கைகளில்
வரையறுக்கப்பட்டிருந்தது!

காலச் சக்கரம்
ஓய்வு மறந்து சுற்றியதால்
பகலும் இரவும்
மாறி மாறி கடந்து போயின!

காணாமல்
போய்க் கொண்டிருந்த
என் நிமிடங்களை
எண்ணிப் பார்ப்பதற்கும்..
சுவாசக் காற்றின்
கனத்தை அளந்து பார்ப்பதற்கும்
யாருமிருக்கவில்லை!

யுகங்கள் மட்டும்
வஞ்சகமில்லாமல்
ஒரு மலரைப் போலவே
மலர்ந்தும் உதிர்ந்தும்
போயின சீக்கிரமாய்!

நான் உனக்காக
எத்துணைக்காலம்
காத்திருப்பது என்பது மறந்நு
கரைந்து கொண்டிருக்கிறது
என் இளமையும்!!!

No comments: