Saturday, May 22, 2010

கனவுகளும் அதில் தொலைந்த நானும் !

இப்போதுகளிலெல்லாம்
சின்ன விடயங்களைக் கூட
சிந்தித்து துயருருகிறேன்
நான்!

தனிமையின் கொடுமையில்
தவிக்கிறேன் நித்தம்..
யோசித்தே மூளை காயப்பட்டு
வழியுது துயர் ரத்தம்!

நினைத்ததை அடைய
நானிருந்தேன்
பொறுமையாய்!
வார்த்தைகளும்
தட்டி விட்டு
இன்றிருக்கிறேன்
வெறுமையாய்!

எண்ணங்களாலே
நான்
காலத்தைக் கழித்தேன்..
கனவுகள் கண்டே
என்னை அதில்
தொலைத்தேன்!

எதற்காகவோ
என் இளமை
வீணாய் கழிந்து போச்சு..
இதை காலம்
சொன்ன போது
நின்றது என் மூச்சு!!!

No comments: