Saturday, May 22, 2010

சுனாமி தடங்கள் !

மனிதா!
நீ என் வாசல் வந்து
சுவாசம் கொண்டு
மனங்கொண்டவளோடு
மதன மாளிகை கட்டினாய்!

உன்
ஊடலை
உன்னிப்பாய் கவனித்து
உவகை கொண்டு
உள்ளம் பூரித்தேன் நானும்!

ஆனால்
அற்பனே!
ஆசைப் பெருக்கி;லும்
ஆதாய வேட்கையிலும்
அண்ட சராசரம் படைத்த
ஆண்டவனையே மறந்தாய் நீ!

ஆதலால் தான்
அவனியிலே நானும்
அவதாரம் எடுத்தேன்
சுனாமியாக!!!

No comments: