Saturday, May 22, 2010

புத்தகக் கருவூலம் !

அஞ்ஞான இருளகற்றி
அகத்தைத் திறக்கும்
அறிவுக் கருவ+லம் அது!

மெய்ஞ்ஞானப் பாதையிலே
மானிடரை வழிநடத்தும்
மேதகைமைப் பாலமும் அது!

அகழ்வார்க்கெல்லாம்
அவ்வப்போது
அள்ளி வழங்கும்
அமுதப் பேரூற்று அது!

நிகழ்கால நடப்புக்கும்
எதிர்காலத் தொடுப்புக்கும்
வாஞ்சையுடன் வனப்பளிக்கும்
வளமான நாற்றும் அது!

சட்ட வல்லுனரும்
திட்ட வரைஞரும்
வட்டமிடும் கோப்பு அது!

தொட்ட துறைக்கெல்லாம்
தொடரீடாய் வெளிச்சமிடும்
துல்லியமான கோப்பும் அது!

விஞ்ஞானப் புதுமையும்
வின்னுலகப் பெருமையும்
விளக்கும்
வித்தகக் கோட்டம் அது!

மெஞ்ஞான்றும் விளக்கேற்றி
எல்லார்க்கும் ஒளியூட்டும்
புத்தகத் தோட்டமும் அது!!!

No comments: