Saturday, May 22, 2010

நிலைக்காத நிதர்சனங்கள் !

மரங்களின் மென்மையான
தலையாட்டலால்
மௌனமான
மாலை வேளைக்கு
உயிர் கொடுத்து
உன் மடியில் சாய்ந்து தூங்க
கனவு கண்டதும் உண்மை தான்!

குமுறும் அலைகளை
உள்ளடக்கி
அமைதி காக்கும்
கடல் போலவே - என்
மனது தவித்ததும்
உண்மை தான்!

ஏக்கம் நிரம்பிய
என் விழிகளுக்கு
உன் புன்னகை
உற்சாகம் தரும் என
நம்பியிருந்ததும் உண்மை தான்!

இரவுத் தூக்கத்தின் போது
என் விழியோரக் கண்ணீர்
தலையணையை
நனைத்ததும் உண்மை தான்!

என் அமைதியான
காதல்
உன் உதாசீனத்தால்
ஊமையாகவே மரணித்ததும்
உண்மை தான்!!!

No comments: