Saturday, May 22, 2010

உயிர் செய் !

அல்லாஹ்வின் அடியானே!
அவனி வாழ்விலே
அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து
ஆத்மாவை புதுப்பித்துக் கொள்!

ஆஹிரத்தின் அமைவிடத்தை
அதிர்ஷ்டவசமாய்
பதிப்பித்துக் கொள்!

சங்கை நபியாரின்
ஷரீஅத்களை துறந்து
சல்லாபத்தில் சஞ்சரிப்போனுக்கு
சுவனம் என்;பது இமயம்!
போகும் பாதை சீராய் அமைந்தால்
மறுமை இன்பமாய் அமையும்!

பாவ வெள்ளம்
பாய்ந்து வர முன்
இதயத்தில் கட்டிடு
அரண்..
காலம் கடக்க
காத்திருந்தாயானால் நீ
காண்பது என்ன
பலன்?

இறுதியாய் வரும்
இறுதி நாளுக்காய்
இங்கே அறத்தை பயிர் செய்!
நாடு போற்ற நல்லவற்றை
உடனே நீ உயிர் செய்!!!

குறிப்பு - (ஆஹிரா :- மறு உலகம்)
(ஷரீஅத் :- சட்டதிட்டம்)

No comments: