Sunday, May 23, 2010

சொல் ஒரு சொல்; !

காதலனே!
காத்திருந்தேன் உனக்காக
காலமெல்லாம்
கடந்து போனது தான் மி;ச்சம்!

பார்த்திருந்தேன்
உன்
தரிசனத்துக்காக
ஏமாற்றம் தான்
பரிசாய் கிடைத்த
எச்சம்!

ஏக்கங்களும் தாகங்களும்
என்னுள் புதைந்து
நொந்து போகிறது மனது!
துளியேனும் புரியாமல்
மரத்திருக்கும்
இதயமா உனது?

கண்ணாளனே!
கருணையுள்ளம் கொண்ட - உன்
காதலியை
காதல் நோயால்
கரைந்து போக வைக்காதே!!!

No comments: