Sunday, May 23, 2010

மயக்கும் மாங்குயிலே !

என்
இதய வானில்
உதயமான பூரண நிலவு நீ!

காதற் சமுத்திரத்தில்
காலமெல்லாம் நீந்தும்
கயல் விழியும் நீ!

வாழ்க்கைப் பூஞ்சோலையில்
வண்ண மலராக
வாசம் பரப்புவதும் நீ!

மனமெனும் மாளிகையில்
மரகத தோரணங் கட்டி
மஞ்சம் தனில் துயிலும் மயிலும் நீ!

மாந்தோப்பில் அமர்ந்து
மதுர கானம் பொழியும்
மாங்குயிலும் நீ!

வான வீதியில்
வண்ணச் சிறகடித்து
வட்டமிடும்
காதற்சிட்டும் நீ!

மோன நிலையிலும்
மௌன மொழி பேசி
மயக்கும் மங்கையும் நீ!

என்
சுவாசக் காற்றாய்
நான் மீட்டும் ஸ்ருதி லயமாய்
என்னில் கலந்த
எழிலரசியும்
நீ நீ நீ !!!

No comments: