Saturday, May 22, 2010

வெற்றிக்கு வழி !

துக்கம் கனத்து
துயில்கிறதா?
ஏக்கம் பொங்கி
வழிகிறதா?

பூக்களெல்லாம்
புயலோடு போராடி
முட்களோடு
முட்டி மோதி
அழகு அரசாங்கத்தை
ஆள்கிறதே?

நேரத்தை வெறுமனே
கழித்திடாமல்
விழித்தெழு...
மனசுக்குள்
தைரியம் பெறவே
படைத்தவனைத் தொழு!

உள்ளத்தின் ஆழத்தில்
நம்பிக்கை விதை
நாட்டு..
நீ யாருக்கும்
சளைத்தவன் அல்ல என்று
பூமிக்கே காட்டு!!!

No comments: