Sunday, May 23, 2010

சிறைப்பட்ட நினைவுகள் !

அன்பே!
என் மனதுக்குள்
தினம் தினம்
விருந்து படைக்கிறது
உன் நினைவுகள்!

என் அகமெனும்
வான வெளியில்
ஒளியாக தெரிவது
உன் முகமே!

நீ நடக்கும்
பாதையெல்லாம்
நான் விரிகின்றேன்
மலர்களாய்!
நீ மிதித்து மிதித்துப் போகும்
ஒவ்வொரு கணமும்
வலிக்கிறதே
என் இதயம்!

என் இதயம் பேசுவது கூட
கேட்கவில்லையா
உன் செவிகளுக்கு?

வேதனையால்
என் மனம்
ஊமையாகிப் போகிறது!

துயரம் விஞ்சி
என் உதடுகளும்
தாழிடப்பட்டு விட்டது!

இது வரை உணரப்படாத
உணர்வுகள்..
இதுவரை சிலிர்த்துக் கொள்ளாத
உறவுகள்..
ஜனனிக்கின்றன
என் நெஞ்சில்!

இது தான் காதலென்பதா?
என்றும் உனக்காகவே
வாழ்கிறேன்
நான்!!!

No comments: