Sunday, May 23, 2010

ஊசலாடும் உள்ளுணர்வுகள் !



என் இதயத்தை திருடிய
என்னுயிர் காதலியே!
என் இதயத் தவிப்பை
நீ அறிவாயா?
உள்ளத் துடிப்பை
உணர்வாயா?

உன்னால்
உவகைப் பூ பூத்து
உள்ளத்தில் கிளுகிளுப்பு!

ஊற்றெடுக்கும்
உணர்ச்சிப் பெருக்கால்
உடலெங்கும் சிலுசிலுப்பு!

என்னையும் மீறி
எல்லையில்லா
ஆசைகள்
எகிறிப் பாய்கின்றன!

உணவுண்ணும் இடத்திலும்
உறங்கும் தளத்திலும்
உன்னுருவமே
உள்ளுக்குள் ஊசலாடும்!

பாச மலராக
பால் சிந்தும் நிலவாக - என்
பார்வையில் பட்டு - மனதில்
படர்ந்த பூங்கொடியே!
பறந்தோடி வா கிளியே!!!

1 comment:

rosa said...

I like this poem & I wish Rimza Mohemed.
-Jumana.