Sunday, May 23, 2010

காதலுக்கோர் அர்ப்பணம் !

நெஞ்சம் மீதில்
மஞ்சங்கொண்ட
இனிய நேசனே..
எழில் வாசனே..
கவி தாசனே!

உனக்காக நான்
உள்ளத்தை அள்ளித் தந்தேன்!
நீயோ
அன்பை கிள்ளித் தந்தாய்!

உயிருக்குயிராய்
உன்னை நேசித்து
ஓயாமல் பூசித்து
உயிரை வளர்த்தேன்!
நீயோ உதாசீனம்
பண்ணுகிறாய் என்னை!

காலங்கள் மாறலாம்
கனவுகளும் மாறலாம்
அன்பே!
என் இதய வானில் நிழலாடும்
உன் எண்ணங்கள் மாறாது!
உயிராக
உணர்வாக அது என்றென்றும்
உறுதியாய் நிலைத்திருக்கும்!

இஃது
என்னையே
உனக்காக அர்ப்ணித்த
காதலுக்கான
சமர்ப்பணம்!!!

No comments: