Sunday, May 23, 2010

நியாயமா சொல் !

நிலவும் வானும் பள்ளி
கொள்ளும் ஓர் அமாவாசை நேரத்தில்
உன் நினைவுகள் துள்ளி வந்து
கொள்ளை இன்பம் தந்து
என் நித்திரையைக் கெடுப்பது
என்ன நியாயம்?

உலவும் தென்றலும்
மலரும் பூக்களும்
மௌன மொழி பேசி
மோக முத்தம் தருகையில்
நீ தேகமெல்லாம் பரந்து
தீராத தாகம் தந்து
தவிக்க விட்டுச் செல்வது
என்ன நியாயம்?

புல்லின் நுனியும் - அதில்
பொலிவுறும் பனியும்
துல்லியமாய் உறவாடி
விரகதாபம் தீர்க்கையில்
நீ - என்
எண்ணத்தில் தேன் வார்த்து
எட்டி எட்டிச் செல்வது
என்ன நியாயம்???

No comments: