Saturday, May 22, 2010

ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் !

என்னைச் சுற்றியுள்ள
உலகம் இருண்டது!
துயரங்களை
அடைகாத்துக் கொண்டேன்
என் இதயத்துக்குள்!

கண்களுக்குள்
கண்ணீரும்
கட்டுப்பாடின்றி!

அன்றெல்லாம்
எனக்காக தாலாட்டு பாடிய
என் இனிய தாயே!
யார் செய்த பாவத்தால்
நீ பிரிந்தாய்
எனை தவிக்க விட்டு??

மாத்திரைகளுக்கூடே
உன்
இறுதி யாத்திரை
இருந்ததை
புரிந்தேன்
பிறகு நான்!

வேதனையின் விளிம்பில்
விக்கித்தேன்!
துன்பத்தின் உச்சத்தில்
துக்கித்தேன்!

தாயே!
உனக்காக என் ஆத்மா
ஓயாது அழுகிறது!!!













No comments: