Saturday, May 22, 2010

ஜீவ நதி !

வாழ்க்கைப் பூஞ்சோலையில்
வாச மலராய் மணம் பரப்பும்
வஞ்சிக் கொடியே..
நெஞ்சிலாடும் பொற்கொடியே..!

நீயில்லாத போது
சோலை நிழலும்
சுகம் தரவில்லை..
சுந்தர நிலவும்
இதம் தரவில்லை!

பாளைச் சிரிப்பால்
பணயக் கைதியாய் என்னை
பிணைத்துக் கொண்டவளே!
அன்பால்
அணைத்துக் கொண்டவளே!

தித்திக்கும் தேன் பலாவும்
தெவிட்டாத தௌ;ளமுதும்
உன்னைப் போல்
தீஞ்சுவையைத் தரவில்லை!

கள்ளமில்லா
உள்ளங் கொண்ட காரிகையே!
உணர்வெல்லாம்
கோலமிடும் தூரிகையே!

நான் உன்னில்
சரணடைந்தேன்!
என் காதல் பயிர்க்கு
நீயே ஜீவநதி!!!

No comments: