Saturday, May 22, 2010

பாவங்களின் பாதணி !

ஓ மனிதா
உனக்கு மது தான்
இனிதா?

மதுவை மாந்தி - நீ
மயக்கத்தை ஏந்தி
தள்ளாடுவது
போதையில் மட்டுமல்ல
சாவின் விளிம்பிலும் தான்!

குடி..
குடியைக் கெடுத்து
குட்டிச் சுவராக்குவதை
அறிந்த பின்னும்
மறக்க முடிவில்லையென்றால்
இன்னமும்
நீ குடி!

இல்லறம்
கல்லறையாய் மாறும்!
மொட்டை மரமாய் செல்வம்
பட்டுப் போகும்!

எல்லாப் பாவங்களுக்கும்
மதுவே திறப்பு
அதை ஒழிப்பதே
நீ மண்ணில் பிறந்ததற்கு
சிறப்பு!!!

No comments: