Sunday, May 23, 2010

நித்தியவான்!

காற்றுடன்
கலந்து வரும்
கடலலையும்
கடமைப்பட்ட
உன் உள்ளத்தைக் கண்டு
களிப்படைகிறது!

இளமையிலும் சளைப்பின்றி
முதுமையிலும் களைப்பின்றி
நீ
இன்னமும் உழைக்கிறாய்..
சோம்பேறிகளின் உள்ளத்தை
உன் சுறுசுறுப்பால் துளைக்கிறாய்!

நீ
கடந்து வந்த காலங்களைப் பார்த்து..
நட்சத்திரமும்
வியக்குது வேர்த்து!

உழைப்பின்றேல்
தூக்கமும்
துக்கமாய் மாறுகிற
சத்திய கதை கூறும்
நித்தியவான் நீ!!!

No comments: