Monday, May 24, 2010

கவிதைத்துளிகள் !



லஞ்சம்!

கடமைகளை பணத்துக்காக
காற்றில் பறக்க விடும்
பேய்!

சில மனைவிகள்!

அடிமைத் தனத்திலிருந்து
தன்னை
விடுவித்துக் கொள்ள
முடியாத
அப்பாவிக் கைதிகள்!


வாழ்க்கை!

இன்பங்களை மட்டும்
அனுபவிப்பதற்கான
மலர் படுக்கையல்ல
வாழ்க்கை!


திருமணம்!

இரு மணங்கள்
இணையும்
ஒரு
இனிய பந்தம்!


மனித நேயம்!

எப்போதோ
இருட்டறையில்
பூட்டப்பட்ட
ஒரு பொக்கிஷம்!


அன்பு!

ஆன்ம உறவின்
உருக்கத்தால்
ஊற்றெடுக்கும்
ஓர்
நீரூற்று!


துக்கம்!

சந்தோஷத்துக்கு
குறிபார்த்து
வைக்கப்பட்ட
வேட்டு!


மகிழ்ச்சி!

துயர் மேகத்
திரை கிழித்து
துலங்கும்
தூய வெண்ணிலவு!


மின்னல்!

பூமியின் அவலங்களை
படம் பிடிக்கும்
வானத்தின்
கெமரா!


இருட்டு!

வெளிச்சத்துக்கு
வழங்கப்பட்ட
தூக்குத் தண்டனை!


சுனாமி!

நிம்மதியை பயமாகவும்
வாழ்க்கையை மரணமாகவும் மாற்றிவிpட்ட
ஒரு அராஜக ராஜா!


கவிதைகள்!

கலைஞன் இதயத்தில்
பிறந்த குழந்தைகள்!


பொறாமை!

கெட்டவனின்
சுவாசக் காற்று!


பேனா!

சமூக அவலங்களையும்
சச்சரவுகளையும்
சம்காரப்படுத்தும்
சக்தி மிக்க
ஆயுதம்!



பெருமூச்சு!

துக்கத்தையும்
துயரத்தையும்
தீச் சுவாலையோடு
வெளிப்படுத்தும்
துருத்தி!


உன் நினைவு!

ஆறாத காயம்
தீராத ரணம்
தேறாத தேகம்
நீங்காத நினைவு!


இனிய நிகழ்வுகள்!

மறதியெனும்
இருட்குளத்தில்
மூழ்கிப்போன
வைர வைடூரியங்கள்!


வாழ்க்கை!

பிரச்சனைகளும்
போராட்டமும
சந்தோஷமும்
சங்கடமும் நிறைந்த
கதம்ப மாலை!


பனித்துளி!

இரவின்
பிரிவுத் துயர் தாளாமல்
நிலாப் பெண்ணாள் வடிக்கும்
கண்ணீர்!


படுக்கை!

பணக்காரனுக்கு
பஞ்சு மெத்தை!
ஏழைக்கு
பாய்!
பிச்சைக் காரனுக்கு
தெரு!


செருப்பு!

நல்லவன் யார்
கெட்வன் யார்
என்று தெரியாமல்
தூக்கிக் கொண்டிருக்கும்
சுமை தாங்கி!



அவன் விழிகள்!

என் மனதைச்
சுண்டி இழுக்கும்
தூண்டில் இரை!


நூல்கள்!

பெறுமதி
கணிக்க முடியாத
சொத்து!


தலையணை!

சோகத்தில் சுகமளித்து
சயணிக்கச் செய்யும்
சிறந்த தாய்மடி!


மணிக்கூடு!

நேரத்தின் முகம்
பார்க்கும்
கண்ணாடி!


அநுபவம்!

பிரச்சினைகள்
கற்றுத் தந்த
பாடம்;!


காதல்!

அழகான
வானவில்!

No comments: