Sunday, May 23, 2010

சதி செய்த ஜாலம் !

அன்பே!
உன்னை நினைக்கையிலே
உள்ளமெல்லாம்
உவகைத் தேன்!

ஊற்றுச்சுனையாக
உள்ளார்ந்த எழுச்சியின்
நினைவாக
உன் பதிவுகளே
உலா வரும் மனதினில்!

என் தேகமெல்லாம்
பரவும் ஒரு வகை உணர்வு
உன் பெயரையே
ஓயாது உச்சரிக்கும்!

நான் போகும் இடமெல்லாம்
நின் நிழலே
நீங்காது என்னை
தொடர்கிறது!

கண்ணில் கலந்து
கருத்து வழி புலர்ந்து
என்னில் குடி கொண்ட
என்னாசைக் காதலனே!

என்னைத் தவிக்க விட்டு
இன்னொருத்தியின் போர்வைக்குள்
உன்னால் மட்டும்
எப்படி உறங்க முடிகிறது?

இது
விதி செய்த கோலமில்லை
உன்
சதி செய்த ஜாலம்!!!

No comments: