Saturday, May 22, 2010

ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் !

காதலின் இருப்பிடமே..
கவிதையின் தரிப்பிடமே..
காலமெல்லாம்
கனவுக்கன்னியாய் என்னுள்
களிநடனம் புரிகிறாய்!

இது
உனக்கும் எனக்கும்
உயிருள்ளவரை உண்டான
உறவுச் சம்பந்தம்!
உன்னையும் என்னையும்
பிரிக்க முடியாத
தெய்வீக பந்தம்!

மாடி மனை பெரிதல்ல
கோடி பணமும் பெரிதல்ல
கொண்ட கொழுந்தனோடு
கருத்தொருமித்து
காலமெல்லாம் வாழ்வதே
காதல் வாழ்க்கை என்றாய்!

கண்ணே.
கனிந்த காதலன்போடு வாழும்
காலத்தை எதிர்பார்க்கிறேன்!
கடிதில் என்னை ஏற்றுக் கொள்வாய்
இல்லாவிட்டால்
கழுமரத்தில்
ஏற்றிக் கொல்வாய்!!!

No comments: