Sunday, May 23, 2010

காதல் பத்தினி !

இதயாசனத்தில்
இங்கிதமாய் வீற்றிருக்கும்
இளவரசனே..!

நீ..
உள்ளன்போடு உரையாடி
உயிர் துணைவனாய் உறவாடி
உண்மையான அன்புக்கு
இலக்கணம் வகுத்தாய்!

உனது நடையிலே
ஒழுக்கத்தின் பிரதிமை
ஒளிர்ந்தது தெளிவாய்!

உடுத்தும் உடையிலே
எளிமையும் தூய்மையும்
மிளிர்ந்தது அழகாய்!

பணத்திமிரோடும்
பகல் வேஷத்தோடும் பழகும்
பத்தாம் பசலிகள் போலல்லாமல்
பண்பாக
பலரோடும் பரிவாக
பழகி எனைக் கவர்ந்தாய்!

உன்னை
உள்ளத்தில் இருத்தி
ஓயாமல் பூசித்து வரும்
உத்தமி நான்!

ஆரவாரமில்லாமல்
அடிமனதில்
அமிசடக்கமாய் உறங்கும்
உன் நினைவும் கனவும்
ஒரு காலும் அழியாது அன்பே!

இனியவனே!
இதயங் கவர்ந்தவனே!
இந்தப் பேதையை
இலவு காத்த கிளியாய்
ஆக்கி விடாதே!!! !

No comments: