Sunday, May 23, 2010

நினைவலைகள் !

கடந்த காலத்தை நோக்கி
திரும்பிச் செல்கின்றன
என் நினைவலைகள்!

அப்போதெல்லாம்
உன்னைக் கண்டால்
மகிழ்ச்சியின் போதையில்
நனைந்திருக்கும்
என் வதனம்!

அடிக்கடி
என் மனதின்
மேற்பரப்பிற்கு வந்துபோகும்
மறுபடி உன்னை
பார்ப்பேனா என்ற ஏக்கம்!

இமைகளை நான்
மூடிய போதும்
உனது ஒவ்வொரு
அணுவையும்
இதயக் கண்ணாடியில்
படம் பிடித்துக் காட்டும்
என் மனம்!

கடைசியாய் நீ என்னுடன்
பேசி விட்டு போகையில்
அடியெடுத்து வைத்த
ஓசைகள் மட்டும்
இன்னும்
என் இதயத்தில்
ஒலித்துக் கொண்டேயிருக்கிறது!!!

2 comments:

Jumana said...

ungal kavithai n ithayaththai eerthu vittathu. Pramaatham!

Rumaiza said...

Very nice poem.I wish you.