Saturday, May 22, 2010

ஆத்மாவின் உறுதி !

இளவேனில் அழகையும்
இயற்கையின் விரிப்பையும்
கண்டு ரசித்த - என்
பூ விழிகள் ரெண்டும்
புயலின் கடுமையையும்
குளிரின் துன்பத்தையும் தவிர
வேறெதையும்
காண்பதில்லை!

அலைகளின்
இனிய ஓசையின்
நாதத்தைக் கேட்ட
என் செவிகள்
நாதியற்றுத் திரியும்
மக்களின் புலம்பலைத் தவிர
வேறெதையும்
கேட்பதிpல்லை!

மனித குலத்தின்
ஆற்றலையும்
பிரபஞ்சத்தின்
அருமையையும்,
இறைவனின் சக்தியையும்
உணர்ந்த பின்பே
என் ஆன்மா
பிரச்சனைகள் தந்த
அனுபவத்தால்
மிகவும் உறுதியடைந்தது!!!

No comments: