Sunday, May 23, 2010

என்னைத் தொலைத்து விட்டு...!

நாட்கள் நகர்ந்தன..
தருணங்கள் தகர்ந்தன..
பருவ மாற்றங்களை
பனியும் வெயிலும் பகர்ந்தன..
விண்ணும் மண்ணும்
வெட்ப தட்பம் நுகர்ந்தன!

நான் எண்ணும்
போதெல்லாம்
நீ என் மனமெனும்
மாளிகைக்கு வருகிறாய்!

மலராய் வந்து
வாசம் பரத்துவாயா?
முள்ளாய் வந்து
இதயத்தை உறுத்துவாயா?

ஆதவன் மறைந்து
அந்தி சாய்ந்த போதும்
உன்னைக் காணாமல்
தவித்திற்று என் மனசு!

ஒரு நிமிடமேனும்
உன் பார்வை படாதா என
ஏங்கிற்று என் வயசு!

உனக்காகவே
என் இதயம் பாடும்
மௌன கீதம்
உன் செவிகளில்
ஏன் விழவேயில்லை?

ஒவ்வொரு கணமும்
நான்
உன்னைச் சுமந்ததால்
என்னையே தொலைத்து விட்டேன்!!!

No comments: