Sunday, May 23, 2010

நட்பு வாழ்வின் நறும் பூ!



தோளுக்கு துணையாகும்
தோழன் - அவன்
துன்பத்தை துடைக்க வரும் பண்
பாளன்!

அன்பைச் சொரிவதிலே
மாரி - அவன்
ஆபத்தில் வழங்கிடுவான்
வாரி!

நெருக்கடியில் கை கொடுக்கும்
நேயன் - அவன்
நேர்மையிலே தோய்ந்து விடும்
தூயன்!

பணம் பார்த்து பழகுவதல்ல
நட்பு - நல்ல
குணம் பார்த்து பழகுவதே
நட்பு!

இன்பத்தில் மட்டும்
இணைவதல்ல நட்பு!
துன்பத்திலும்
தொடர்வதே நட்பு!!!

1 comment:

Jumana said...

I like this poem.