Sunday, May 23, 2010

உயிர் பிணத்தின் மனம் !

நான் நினைக்கிறேன்
காவியம் படைக்க!
நீ நினைக்கிறாய் அதில்
கறை பூச!

நான் செயலில் காட்டுகிறேன்
மனித நேயத்தை!
நீ கதை அளக்கிறாய்
மானுடம் பற்றி!

நான் விரும்புகிறேன்
எளிமையை!
நீ மூழ்குகிறாய்
ஆடம்பரத்தில்!

நான் மதிக்கிறேன்
அன்பை!
நீ மாறுகிறாய்
அரக்கனாய்!

நான் காப்பாற்றுகிறேன்
வாக்குறுதிகளை!
நீ பறக்க விடுகிறாய்
காற்றில் அதை!

நான் மதிக்கிறேன்
மனிதர்களை!
நீ மதிக்கிறாய்
பணத்தை!

என் கண்ணீர் துளியில்
நீ தெளிக்கிறாய் பன்னீர்!

நீ போடுகிறாய்
இரட்டை வேடம்!
நான் முயற்சிக்கிறேன்
களைக்கவே!!!

No comments: