Saturday, May 22, 2010

தென்றலே தூது செல் !

சவுந்தரியமான
சோலை மலரே..
என் சுந்தரியின்
நினைவால் நான்
சோபையிழந்து
சோகமாய் இருப்பதை
அந்த
சுந்தரவல்லியிடம்
கூற மாட்டாயோ?

வானில் தவழும்
வண்ண முகிலே..
வட்டக் கருவிழியால் என்னை
வளைத்துக் கொண்ட - அந்த
வஞ்சிக் கொடியாளிடம் - என்
வாட்ட நிலையை
வாயாரச் சொல்லிவிட மாட்டாயோ?

செக்கச் சிவந்திருக்கும்
செந்தூரப் பூவே!
செவ்வரி இதழால் - தினம்
செந்தேன் சிந்துகிற
சிங்கார வல்லியிடம்
சோம்பிய - என்
மன நிலையை
சொல்லி வர மாட்டாயோ?

தேசுலாவும் வீதியிலே - தினம்
தூது செல்லும் தென்றலே...
தேமதுர மொழியாலே - என்னை
தேற்றுகின்ற பைங்கிளியிடம்
தேகமெல்லாம்
தேம்புகின்ற என் நிலையை
தெளிவுபடுத்த மாட்டாயோ???

No comments: