Saturday, May 22, 2010

ஆராதனை !

என்னை
ஆரத்தழுவி
அரவணைத்த அன்புத் தாயே!
நீ பிரிந்து
யாருமற்ற அநாதையாய் என்னை
அழ வைத்தாயே!

துடுப்பிழந்த படகாய்
துயரக் கடலில்
தத்தளிக்கும் என்னை
கரைசேர்ப்பார் யாருண்டு?
தாயன்புக்கு ஈடாக
தரணியிலே ஏதுண்டு?

உன் பிரிவுத் துயர் தாளாமல்
ஓயாது புலம்பும் எனக்கு..
ஒத்தடம் தர
உனை அன்றி
யார் வருவார் துணைக்கு?

உன்னை எண்ணியே
உயிர் சுற்றுது
ஒவ்வொரு திக்கும்!

உனக்காக
என்னுள்ளம்
ஓயாது ப்ரார்த்த்pக்கும்!!!

No comments: